சென்னை விம்கோ நகர் ரயில் நிலையத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.
திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி விரைவு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
ரயில் வருவதை கவனிக்காத நபர் ஒருவர் ரயில் பாதையை கடக்க முயற்சித்தபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார், உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.