நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத வகையில் 2.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி தொகையை விட இந்தாண்டு கிடைத்த வருமானம் 12.40 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 35 கோடி ரூபாய் வசூலான நிலையில், ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 267 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகவும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியாக 12 ஆயிரத்து 210 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.