விழுப்புரத்தில் மயான பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் நீதிமன்ற உத்தரவுப்படி, போலீசார் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.
விழுப்புரம் வழுதரெட்டி காலனியில் உள்ள அங்காளம்மன், குறத்தி அம்மன், பெரியாயி அம்மன் ஆகிய மூன்று கோயில்கள், மயான பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் கோயில்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதன் பேரில் நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார் பாதுகாப்புடன் கோயில்களை அகற்றினர்.