போலி ஐஎஸ்ஐ முத்திரை: குடிநீர் தொழிற்சாலையில் BIS அதிகாரிகள் அதிரடி சோதனை!
Mar 15, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி ஐஎஸ்ஐ முத்திரை: குடிநீர் தொழிற்சாலையில் BIS அதிகாரிகள் அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
May 2, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தொழிற்சாலையில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

பொன்னேரி தாலுகா, சோழவரம் தொகுதி, அலமாதி கிராமத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் தொழிற்சாலை இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016-ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின்  அடிப்படையில் மே 1 அன்று  இந்திய  தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் பறிமுதல் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது  போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடன் குடிநீர் நிரப்பப்பட்ட 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1,782 பாட்டில்கள், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 11,616 பாட்டில்கள், 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 9,600 பாட்டில்கள், 300 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 10,465 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், போலியான ஐஎஸ்ஐ முத்திரை பொறிக்கப்பட்ட சுமார் 2,58,000 லேபிள்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநர் ஸ்ரீஜித் மோகன், துணை இயக்குநர் தினேஷ் ராஜகோபாலன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத் தலைவர் ஜி.பவானி தெரிவித்தார்.

இந்தக் குற்றத்திற்கு முதல் மீறலுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது ரூ.2 லட்சத்திற்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும். பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது ஒட்டப்படும் பொருட்களின் மதிப்பில் 10 மடங்கு வரை அபராதம் நீட்டிக்கப்படலாம்.

இது போன்ற விதி மீறல் தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியவந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அல்லது BIS Care செயலியைப் பயன்படுத்தியோ  அல்லது cnbo1@bis.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Fake ISI stamp: BIS officials raid the drinking water factory!
ShareTweetSendShare
Previous Post

தொலைத் தொடர்புத்துறை உரிமதாரர்களுக்கான தொடர்பு முகாம்!

Next Post

சென்னை – திருவண்ணாமலைக்கு இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies