போலி ஐஎஸ்ஐ முத்திரை: குடிநீர் தொழிற்சாலையில் BIS அதிகாரிகள் அதிரடி சோதனை!
Sep 12, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி ஐஎஸ்ஐ முத்திரை: குடிநீர் தொழிற்சாலையில் BIS அதிகாரிகள் அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
May 2, 2024, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் தொழிற்சாலையில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

பொன்னேரி தாலுகா, சோழவரம் தொகுதி, அலமாதி கிராமத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் தொழிற்சாலை இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016-ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின்  அடிப்படையில் மே 1 அன்று  இந்திய  தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் பறிமுதல் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது  போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடன் குடிநீர் நிரப்பப்பட்ட 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1,782 பாட்டில்கள், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 11,616 பாட்டில்கள், 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 9,600 பாட்டில்கள், 300 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 10,465 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், போலியான ஐஎஸ்ஐ முத்திரை பொறிக்கப்பட்ட சுமார் 2,58,000 லேபிள்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநர் ஸ்ரீஜித் மோகன், துணை இயக்குநர் தினேஷ் ராஜகோபாலன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத் தலைவர் ஜி.பவானி தெரிவித்தார்.

இந்தக் குற்றத்திற்கு முதல் மீறலுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது ரூ.2 லட்சத்திற்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும். பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது ஒட்டப்படும் பொருட்களின் மதிப்பில் 10 மடங்கு வரை அபராதம் நீட்டிக்கப்படலாம்.

இது போன்ற விதி மீறல் தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியவந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அல்லது BIS Care செயலியைப் பயன்படுத்தியோ  அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Fake ISI stamp: BIS officials raid the drinking water factory!
Share
Tweet
SendShare
Previous Post

தொலைத் தொடர்புத்துறை உரிமதாரர்களுக்கான தொடர்பு முகாம்!

Next Post

சென்னை – திருவண்ணாமலைக்கு இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies