பொதுமக்களின் நீண்ட நாள் கனவான சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்கியது.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பினரின் தொடர் முயற்சியால் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை, கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயிலானது பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12.05க்கு சென்றடையும்.
அதேபோல் மறுநாள் திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மணிநேரம் பயணத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகளை அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பினர் உற்சாகமாக வரவேற்றனர்.