தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயம் அடைந்தனர்.
சைதன்யபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோகன் நகரில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் ஹோட்டலில் இருந்த 20 பேரை மீட்டனர். இதில் இருவர் காயம் அடைந்தனர் . அவர்கள் சிகிசைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்