மதுரையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நரிமேட்டில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மூதாட்டி போதுமணி என்பவர், தனது இரு பேத்திகளுடன் தடுப்பூசி போட சென்றுள்ளார்.
அப்போது பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த போதுமணி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டியின் பேத்திகள் இருவரும் காயமின்றி தப்பினர்.