வெயில் காலங்களில் விடுக்கப்படும் பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு வண்ண எச்சரிக்கைகள் குறித்தான தகவல்களை தற்போது பார்க்கலாம்…
வெயில் காலங்களில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நிர்வாக ரீதியில் தெரிவிக்க பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு ஆகிய 4 வண்ணங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பச்சை எச்சரிக்கை என்பது பிரச்சினை எதுவும் இல்லை என்பதை குறிக்கிறது.
வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பதையும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதையும் மஞ்சள் எச்சரிக்கை உணத்துகிறது.
ஆரஞ்சு எச்சரிக்கையை பொறுத்தவரையில் வெயிலின் தாக்கம் மோசமாக இருக்கும் என்பதை உணர்த்துவதோடு போக்குவரத்து, மின்சார வினியோகம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது.
சிவப்பு நிற எச்சரிக்கை வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்பதை குறிக்கிறது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதையும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் உணத்துகிறது.