தொழிலில் லாபம் பெருக வேண்டுமா ? மயிலாப்பூரில் உள்ள இந்த கோயிலுக்கு செல்லுங்கள்!
Aug 14, 2025, 01:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலில் லாபம் பெருக வேண்டுமா ? மயிலாப்பூரில் உள்ள இந்த கோயிலுக்கு செல்லுங்கள்!

Web Desk by Web Desk
May 4, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்ன தொழில் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் வரவேண்டும் . அந்த லாபமும் ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு வளர வேண்டும். இப்படி ஆசைப்படும் அத்தனை பேருக்கும்  ஆசைகள் அத்தனையும் நிறைவேற ஒரு கோயில் இருக்கிறது என்று சொன்னால் அது எங்கே என்று தானே கேட்பீர்கள் ? அந்த அற்புதமான கோயில் பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் இது ஸ்டார்ட் அப் காலம். புது புது தொழில்கள் வரத் தொடங்கியுள்ளன.
விரைவில் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது  பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தி பெருக வேண்டும். அதற்கு இளைஞர்கள் சுய தொழிலில் வெற்றிகரமாக செயல்படவேண்டும்.

அதை தான் சுயசார்பு பாரதம் என பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அதோடு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் சுயதொழில் செய்ய விஸ்வகர்மா திட்டம் போன்ற பல திட்டங்களையும் தந்திருக்கிறார் .

செய்யும் தொழிலில் தொடர் வெற்றிக்களைக் குவிக்க செல்ல வேண்டிய ஒரு திருக்கோயில் இருக்கிறது . அது எந்த கோயில் என்று கேட்கிறீர்களா?

சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில் தான்.  ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள். ஊழி தோறும் பிறந்து படைக்கும் தொழிலை சிவபெருமான் ஆணை வழி செய்யும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள்.

‘அவனுக்கும் 5 தலைகள் எனக்கும் 5 தலைகள்’- எனவே சிவபெருமானுக்கு இணையானவன் நான் என்ற ஆணவம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது .பிரம்மாவின் ஆணவத்தை அழிக்க முடிவு செய்த சிவபெருமான் அவனின் ஒரு தலையைப் பூவைக் கிள்ளுவது போல் கிள்ளி எடுத்தான் .

ஆணவத்தால் ஆடினால் இதுதான் கதி என்பதைப் பிறருக்கு உணர்த்த, தான் கிள்ளிய பிரம்மாவின் கபாலத்தைத் தன் கையில் ஏந்திக் கொண்டான். எனவே கபாலீஸ்வரன் இவன் ஆனான். இவனிருக்கும் இடம் கபாலீஸ்வரம் ஆனது.

சிவபெருமானிடம், அம்பிகை உபதேசம் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மயில் ஒன்று தோகை விரித்து நடனமாட , அதன் அழகில் அம்பிகை மயங்கினாள். உபதேச நேரத்தில் சிவசிந்தனையிலிருந்து மாறு பட்டதால், விமோசனத்துக்காக அம்பிகை மயிலுருவில் புன்னை மரத்தடியில் சுவாமியை வழிபட்டு , இறைவன் அருள் பெற்றாள் .

மயில் உருவில் இறைவனை, இத்தலத்தில் பார்வதி பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை எனப்படுகிறது. வேதங்கள் இத்தலத்தில் இறைவனை வழிபட்ட காரணத்தால் வேதபுரி என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்றும் புகழப்படுகிறது .

ஐப்பசி மாதம் வரும் ஓணநாள் அன்று , ஸ்ரீ இராமபிரான் இங்கே இந்த தலத்தில் கபாலீஸ்வரருக்குப் பிரமோற்சவம் நடத்தி வழிபட்டிருக்கிறார். ஆனால் இப்போது பங்குனி மாதம் பிரமோற்சவம் நடக்கிறது . அந்த திருவிழாவின் போது நடக்கும் அறுபத்து மூவர் திருவீதியுலா மிகவும் சிறப்பு பெற்றது .

மேற்கு நோக்கி இருக்கும் இந்த கோயிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கில் அமைந்துள்ளது . ராஜ கோபுரம் வழி கோயிலின் உள்ள சென்றால் நேர் எதிரே நர்த்தன விநாயகர் இருக்கிறார்.

உண்ணாமுலை அம்மன் ,அண்ணாமலையார் , சுந்தரேஸ்வரர் மற்றும் நவகிரக சன்னதி தரிசனம் முடித்து வலமாக வந்தால் , சிங்காரவேலர் சன்னதி,பழனியாண்டவர் சன்னதி, வாயிலார் நாயனார் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதி, அங்கம் பூம்பாவை சன்னதிகள் அமைந்துள்ளன .

கொடிமரம் அருகே பலிபீடமும் அதற்கு முன்னால் நந்திஎம்பெருமான் சுவாமியைப் பார்த்த படி இருக்கிறார். சுவாமியின் கருவறை பிரகாரத்தில் நடராஜர் , முருகன்,செல்வா விநாயகர்,தக்ஷணா மூர்த்தி சோமாஸ்கந்தர் சன்னதிகள் உள்ளன .

வடக்கு நோக்கி நின்ற நிலையில் தேடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள் அன்னை கற்பகாம்பாள்.வெளிப்பிரகாரத்தில் கோசாலைக்கு முன் புன்னை மரமும் , புன்னை மரத்தடியில் அம்பிகை மயிலாக சுவாமியை வழிபடும் ஆதிக் கபாலி கோயில் திகழ்கிறது .

இந்த திருக்கோயின் தீர்த்தமான கபாலி தீர்த்தம், வாலி தீர்த்தம் ,கங்கை தீர்த்தம் ,ராமன் தீர்த்தம் ,சுக்கிரன் தீர்த்தம்,வேத தீர்த்தம் ,கடவுள் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது .

இங்கே வந்து கபாலீஸ்வரரை வழிபட்டால் ,எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் வராது .அந்த தொழில் மேலும் மேலும் விருத்தி அடையும் என்றும், இன்றும் இதற்கான சான்றுகள் பல இருக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

தொழில் மட்டும் இல்லை எந்த துறை என்றாலும் அந்த துறையில் உச்ச பதவியை அடைய வேண்டுமா ? அதற்கும் ஒரே பரிகார கோயில் இந்த கபாலி கோயில் தான்.

Tags: ChennaiKarpakampal Udanurai Kapaleeswarar templemyalapore
ShareTweetSendShare
Previous Post

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து : இழப்பீடு வழங்க உத்தரவு!

Next Post

தமிழகத்தில் தொடங்கியது அக்னி நட்சத்திரம் : வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்ப்பு!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies