கூலிவேலை செய்யும் பத்மஸ்ரீ விருதாளர்!
Mar 15, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூலிவேலை செய்யும் பத்மஸ்ரீ விருதாளர்!

Murugesan M by Murugesan M
May 5, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழ்க்கை அழகானது என்றாலும் சமயங்களில் ஆபத்தானதும் கூட. ஒரு காலத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட சிலரின் முகத்தில் சட்டென்று கறை பூசி விடுகிறது வாழ்க்கை. பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவர் தள்ளாத வயதில் தினக் கூலியாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். யார் அவர் ? என்ன காரணம் ? என்பதை விளக்கும் செய்தி தொகுப்பு.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. அழிந்து வரும் ‘கின்னரா’ என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் ஒருவர்.

கின்னாரா இசைக்கருவியை இசைப்பதில் புதியவர்கள் யாரும் வராத நிலையில் இவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

கின்னாரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும். கின்னாரா இசைக்கருவியில் காலத்துக்கேற்ற மாற்றத்தை இவர் ஏற்படுத்தினார்.

அரிய இசைக்கருவியான ‘கின்னரா’வை புதிய வடிவில் மாற்றி, பாரம்பரிய இசைக்கலையைப் பாதுகாத்த இவரின் பணி எல்லோராலும் பாராட்டப்பட்டது.

கின்னாரா இசைக்கலைஞர் தர்ஷனம் மொகிலையாவுக்கு, மத்திய அரசு , கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

தர்ஷன் மொகிலையாவைப் பாராட்டிய அப்போதைய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவருக்கு, அரசு சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீட்டு மனை ஒதுக்கிக் கொடுத்தார். மேலும் அந்த மனையில் வீடு கட்டுவதற்கான கட்டுமானச் செலவு மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.

நடிகர் பவன் கல்யாணின் ‘பீமலா நாயக்’ திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தர்ஷன் மொகிலையா பிரபலமானார்

இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற 78 வயதான தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வருமானத்துக்காக , வேறு வழி இல்லாமல், ஹைதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் தினக் கூலியாக வேலை செய்து வருகிறார். எதனால் இந்த நிலைமை?

வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ள தமது மகனின் மருத்துவச் செலவுக்கு மட்டும் மாதந்தோறும் 7000 ரூபாய் செலவாகிறது.

பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செலவுகள் மற்றும் வீட்டு செலவுகள் என மாத செலவுகளுக்கே கஷ்ட படும் தர்ஷன் மொகிலையாவுக்கு அரசு சார்பில் வழங்கப் பட்டு வந்த மாதம் 10,000 ரூபாய் மானியம் அண்மையில் நிறுத்தப்பட்டு விட்டது.

ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டதற்கு அரசு அதிகாரிகள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்து விட்டார்கள்.

1 கோடி ரூபாய் மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் அரசு ஒதுக்குவதாக சொன்ன 600 சதுர அடி இடமும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இன்னமும் நிலுவையில் இருக்கிறது என்று கண்கலங்குகிறார் தர்ஷன் மொகிலையா.

Tags: Padma Shri awardee who works as a wage earner!
ShareTweetSendShare
Previous Post

புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சேதம்!

Next Post

இளைராஜா – வைரமுத்து ரசிகர்கள் இடையே மீண்டும் கருத்து மோதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies