கூலிவேலை செய்யும் பத்மஸ்ரீ விருதாளர்!
Aug 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூலிவேலை செய்யும் பத்மஸ்ரீ விருதாளர்!

Murugesan M by Murugesan M
May 5, 2024, 11:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாழ்க்கை அழகானது என்றாலும் சமயங்களில் ஆபத்தானதும் கூட. ஒரு காலத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட சிலரின் முகத்தில் சட்டென்று கறை பூசி விடுகிறது வாழ்க்கை. பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவர் தள்ளாத வயதில் தினக் கூலியாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். யார் அவர் ? என்ன காரணம் ? என்பதை விளக்கும் செய்தி தொகுப்பு.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. அழிந்து வரும் ‘கின்னரா’ என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் ஒருவர்.

கின்னாரா இசைக்கருவியை இசைப்பதில் புதியவர்கள் யாரும் வராத நிலையில் இவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

கின்னாரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும். கின்னாரா இசைக்கருவியில் காலத்துக்கேற்ற மாற்றத்தை இவர் ஏற்படுத்தினார்.

அரிய இசைக்கருவியான ‘கின்னரா’வை புதிய வடிவில் மாற்றி, பாரம்பரிய இசைக்கலையைப் பாதுகாத்த இவரின் பணி எல்லோராலும் பாராட்டப்பட்டது.

கின்னாரா இசைக்கலைஞர் தர்ஷனம் மொகிலையாவுக்கு, மத்திய அரசு , கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

தர்ஷன் மொகிலையாவைப் பாராட்டிய அப்போதைய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவருக்கு, அரசு சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீட்டு மனை ஒதுக்கிக் கொடுத்தார். மேலும் அந்த மனையில் வீடு கட்டுவதற்கான கட்டுமானச் செலவு மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.

நடிகர் பவன் கல்யாணின் ‘பீமலா நாயக்’ திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தர்ஷன் மொகிலையா பிரபலமானார்

இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற 78 வயதான தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வருமானத்துக்காக , வேறு வழி இல்லாமல், ஹைதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் தினக் கூலியாக வேலை செய்து வருகிறார். எதனால் இந்த நிலைமை?

வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ள தமது மகனின் மருத்துவச் செலவுக்கு மட்டும் மாதந்தோறும் 7000 ரூபாய் செலவாகிறது.

பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செலவுகள் மற்றும் வீட்டு செலவுகள் என மாத செலவுகளுக்கே கஷ்ட படும் தர்ஷன் மொகிலையாவுக்கு அரசு சார்பில் வழங்கப் பட்டு வந்த மாதம் 10,000 ரூபாய் மானியம் அண்மையில் நிறுத்தப்பட்டு விட்டது.

ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டதற்கு அரசு அதிகாரிகள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்து விட்டார்கள்.

1 கோடி ரூபாய் மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் அரசு ஒதுக்குவதாக சொன்ன 600 சதுர அடி இடமும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இன்னமும் நிலுவையில் இருக்கிறது என்று கண்கலங்குகிறார் தர்ஷன் மொகிலையா.

Tags: Padma Shri awardee who works as a wage earner!
Share
Tweet
SendShare
Previous Post

புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சேதம்!

Next Post

இளைராஜா – வைரமுத்து ரசிகர்கள் இடையே மீண்டும் கருத்து மோதல்!

Related News

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies