பழனி கோயில் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 இடங்களில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நூறு கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்த விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், சிறையில் உள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை காவல்துறையினர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஆஞ்சியோ பரிசோதனையை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு 2 இடங்களில் ரத்தக் குழாய் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். மேலும் ஆஞ்சியோ பரிசோதனை முடிவின்படி ஜஸ்டின் மணிகண்டனுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்
















