வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கவும், வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் RBI புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது.
இந்த புதிய விதிகள் இறுதி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.
ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதம் எப்போது மாற்றப்படுகிறது என்ற விவரங்கள், வட்டி மாற்றப்படும் தேதி ஆகியவற்றை தெளிவாக கொடுக்க வேண்டும் எனவும், சிறு குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போது அந்த கடனுக்கான வட்டி மற்றும் பிற கட்டணம் எதுவும், கடன் தொகையை விட அதிகமாக இருக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
















