தேசப்பற்று மற்றும் போதையில்லா நாட்டை உருவாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடியில் ஆயிரம் அடி நீள தேசிய கொடியை மாணவர்கள் ஏந்தி சாதனை படைத்தனர்.
80ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள கிங் ஆப் கிங்ஸ் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் கிங்ஸ்டன், ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதிர் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து, ’ஐ லவ் இந்தியா’ என்ற வாசகத்தில் நின்று, தேசப்பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து, ஆயிரம் அடி நீள மூவண்ண தேசியக் கொடியை கையில் ஏந்தி, சாதனை படைத்தனர்.
















