பாரத தேசத்தின் 80வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் 13வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்..
இந்தியாவின் 80-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையிலும், வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கில் இளைஞர்களின் பங்கை சிறப்பிக்கும் வகையிலும் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, 13வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, செங்கோட்டையில் முதல் முறையாக வந்தே மாதரம் பாடப்படவுள்ளது.
இந்த விழாவில் 5 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது….
















