சென்னை உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில், முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில், வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி மையங்கள், மாவட்ட நீதித்துறை அலுவலகங்களில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர், தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இறுதியாக தேசியக் கீதம் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது குறித்து சுற்றறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
















