கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
Aug 14, 2026, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 14, 2026, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி ஆணையை  ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் 31 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதற்கான பணி ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பணியாணை வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிதிமன்றம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு பணியாணை வழங்கிய அரசாணையை ரத்து செய்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்ட பிரபாகரன் செல்வகுமார், ஆனந்த ஜோதி, பிரபாகரன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தமிழக அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கப்பட்டது என்றும், அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே இல்லாத நிலையில் அதனை எவ்வாறு ரத்து செய்ய முடியும்? என் கேள்விகளை எழுப்பினர்.

அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அரசு வேலைகள் எவ்வாறு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளது என்ற வாதத்தை முன் வைத்தனர்.

அப்போது நீதிபதிகள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்து விட்டனர். அது துரதிஷ்டவசமான சம்பவம். அப்படி இருக்கையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அரசு  வேலை வழங்குகிறது என்ற பட்சத்தில், வேலை வழங்கக் கூடாது என கூறுவதற்கு நீங்கள் யார்? என கேள்வி எழுப்பினர்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை பார்க்கும் நபராக இருக்கலாம் அவர்தான் குடும்பத்தை வழி நடத்துபவராக இருக்கலாம் அவ்வாறான ஒருவர் இதுபோன்று நெரிசலில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவருக்கு வேலை வழங்கக் கூடாது என்று கூறுகிறீர்களா? என கேள்விகளை கேட்டதோடு, இந்த விவகாரத்தில் தயவு செய்து நீங்கள் அரசியலை புகுத்த வேண்டாம் என நீதிபதிகள் எதிர்மனுதாரர்களிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நீதிபதிகள் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags: vijay tamil nadu cm livegovernment job appointment ordersMadras High Court order stayedsupreme courtkarur stampedetamil nadu cm vijaytamil nadu cm vijay news
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

Related News

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

சொத்து வரி மாற்றியமைப்பு நிறுத்தம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக பாஜக கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

லார் கிப்பான் குரங்குடன் வீடியோ – நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies