திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? என்றும், இந்த ஆண்டு கார்த்திகைக்குள் பணிகள் முடியுமா? என்றும், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் வழக்கிற்காக கோயில் நிதியிலிருந்து வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கோயில் நிதி கோயிலுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் – ஆனால் வழக்கறிஞர் கட்டணத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் ஏன் இன்னும் ஆய்வை முடிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வருடம் கார்த்திகைக்குள் அளவீடு பணிகளை முடித்து விடுவீர்களா என்றும் வினா எழுப்பினர். இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
















