கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலில் யாரும் இறங்க வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடல் அலையில் சிக்கி தேங்காய் பட்டினத்தில் ஒரு சிறுமியும், கோடிமுனை அருகே சென்னையைச் சேர்ந்த இரண்டு பேரும் நேற்று பலியாகினர்.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த 13 மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.
லெமுரியா கடற்கரையில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, ஐந்து பேரை திடீரென ராட்சத அலைகள் இழுத்துச் சென்றன.
தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர், சாருஹாபி, சுருதி சரண்யா ஆகிய இரண்டு மாணவிகளின் உடல்களை உள்ளனர்.
மேலும் 3 பேரின் உடல்களைத் தேடும் பணியில் கடலோர காவற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.