நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
சேவையே கடவுள் என்ற தனது அறக்கட்டளை மூலம், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில், விவசாயி சதீஷ் என்பவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக டிராக்டர் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில், விவசாய உபகரணங்கள் வழங்கி வருவதாக கூறினார்.
நடிகர் விஜய் மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார்.