தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல உள்ளதாகவும், வட இந்தியாவில் உள்ளவர்கள் சீனர்கள் போல உள்ளதாக காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக சாம் பிட்ரோடா பேசியது விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில்அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
அதில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களை போல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மொழிகள், மதங்கள், சமையல் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அவ்வப்போது மோதல்கள் இருந்தபோதிலும், 75 ஆண்டுகளாக இணக்கமாக வாழும் இந்திய மக்களின் திறனையும் அவர் எடுத்துக்காட்டினார்.
சாம் பிட்ரோடாவின் இந்த நிறவெறி பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.