IRONING செய்யாத ஆடை அணிந்து வர உத்தரவு CSIR அறிவிப்பு ஏன்?
Sep 18, 2025, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

IRONING செய்யாத ஆடை அணிந்து வர உத்தரவு CSIR அறிவிப்பு ஏன்?

Web Desk by Web Desk
May 9, 2024, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (CSIR), தனது ஊழியர்களுக்கு ஒரு வேடிக்கையான சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. திங்கட்கிழமைகளில் இனி, அயர்ன் செய்யப்படாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஏன் இந்த திடீர் அறிவிப்பு ? என்ன காரணம் ? என்பதை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு.

MNC போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வித்தியாசமான வேலை கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும். சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் ஊழியர்களுக்கு வேலை பளு தெரியாது என்பதற்காக , அடிக்கடி அலுவலக நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றங்களைச் செய்தபடியே இருப்பார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களில் தங்களுக்கு பிடித்தமான உடையணிந்து வரலாம் என்பார்கள்.

ஆனால் இந்திய நிறுவனமான CSIR சுற்றுச் சூழலுக்கு ஆதரவாக, திங்கள்கிழமைகளில் அயர்ன் செய்யப்படாத உடைகளை அணியுமாறு அதன் ஊழியர்களைக் ‘Wrinkles Acche Hai’ (WAH) என கேட்டுக் கொண்டுள்ளது.

மே 1 ஆம் தேதியில் இருந்து மே 15 ஆம் தேதி வரை CSIR நிறுவனத்தின், ‘ஸ்வச்சதா பக்வாடா’வின் ஒரு பகுதியாக ‘ரிங்கிள்ஸ் அச்சே ஹை’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அயர்ன் செய்வதற்கு முக்கிய தேவை மின்சாரம். இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் மின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் பணியிட மின்சார செலவினங்களை 10 சதவிகிதம் குறைப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்டதே ‘ஸ்வச்சதா பக்வாடா’ திட்டம் .

காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒரு அடையாளப் போராட்டம் தான் இது. நாட்டின் ஆற்றல் சேமிப்புக்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பதை ஊழியர்களிடம் கொண்டு செல்லவே இதை நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், சிஎஸ்ஐஆரின் முதல் பெண் இயக்குனருமான டாக்டர் கலைச்செல்வியின் முன் முயற்சிகளால் , CSIR நிறுவனத்தில் பல சுற்றுசூழல் பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்பட்டுள்ளதாக CSIR அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலைப் பாதுகாப்பதற்கான சிஎஸ்ஐஆரின் முயற்சியின் ஒரு பகுதியாக ‘Wrinkles Acche Hai’ பிரச்சாரம் உள்ளது என்று கூறிய டாக்டர் கலைச்செல்வி, “ஒவ்வொரு செட் துணிகளையும் அயர்ன் செய்யும் போது ஏறத்தாழ, 200 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. எனவே, ஒவ்வொரு வாரமும் ஒரு நாளுக்கு அதைக் குறைப்பதே ‘Wrinkles Acche Hai’ பிரச்சாரத்தின் நோக்கமாகும்! என்றும் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப களங்களில் ஆராய்ச்சிப் பணிகளில் செயல்படும் CSIR இந்தியாவின் முக்கிய R&D நிறுவனமாகும்.

37 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நிறுவனமே CSIR எனப்படும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாகும் .

இதில் 3521 விஞ்ஞானிகள், தொழில்நுட்ப மற்றும் துணைநிலை ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 8000 க்கும் ஊழியர்கள் பணிபுரியும் CSIR நிறுவனத்தின் இந்த முயற்சி மிக நல்ல தொடக்கமாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.

இந்தியாவின் மின்சார நுகர்வு பல மடங்கு கூடி வரும் நிலையில் , சுற்றுச் சூழல் பாதுகாப்பில் Wrinkles Acche Hai’ பிரச்சாரம் பெரிய மாற்றத்திற்கான ஒரு சிறிய தொடக்கமாக கருதலாம்.

Tags: Why the CSIR notification to wear non-ironing clothes?
ShareTweetSendShare
Previous Post

பிட்ரோடாவின் இனவெறி கருத்து காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமா திமுக?

Next Post

ரஃபாவை கட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல்!

Related News

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

பாலிவுட் நடிகை  திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies