IRONING செய்யாத ஆடை அணிந்து வர உத்தரவு CSIR அறிவிப்பு ஏன்?
Jul 29, 2026, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

IRONING செய்யாத ஆடை அணிந்து வர உத்தரவு CSIR அறிவிப்பு ஏன்?

Murugesan M by Murugesan M
May 9, 2024, 06:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (CSIR), தனது ஊழியர்களுக்கு ஒரு வேடிக்கையான சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. திங்கட்கிழமைகளில் இனி, அயர்ன் செய்யப்படாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஏன் இந்த திடீர் அறிவிப்பு ? என்ன காரணம் ? என்பதை விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு.

MNC போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வித்தியாசமான வேலை கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும். சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் ஊழியர்களுக்கு வேலை பளு தெரியாது என்பதற்காக , அடிக்கடி அலுவலக நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றங்களைச் செய்தபடியே இருப்பார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களில் தங்களுக்கு பிடித்தமான உடையணிந்து வரலாம் என்பார்கள்.

ஆனால் இந்திய நிறுவனமான CSIR சுற்றுச் சூழலுக்கு ஆதரவாக, திங்கள்கிழமைகளில் அயர்ன் செய்யப்படாத உடைகளை அணியுமாறு அதன் ஊழியர்களைக் ‘Wrinkles Acche Hai’ (WAH) என கேட்டுக் கொண்டுள்ளது.

மே 1 ஆம் தேதியில் இருந்து மே 15 ஆம் தேதி வரை CSIR நிறுவனத்தின், ‘ஸ்வச்சதா பக்வாடா’வின் ஒரு பகுதியாக ‘ரிங்கிள்ஸ் அச்சே ஹை’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அயர்ன் செய்வதற்கு முக்கிய தேவை மின்சாரம். இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் உள்ள சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் மின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் பணியிட மின்சார செலவினங்களை 10 சதவிகிதம் குறைப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்டதே ‘ஸ்வச்சதா பக்வாடா’ திட்டம் .

காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒரு அடையாளப் போராட்டம் தான் இது. நாட்டின் ஆற்றல் சேமிப்புக்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பதை ஊழியர்களிடம் கொண்டு செல்லவே இதை நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், சிஎஸ்ஐஆரின் முதல் பெண் இயக்குனருமான டாக்டர் கலைச்செல்வியின் முன் முயற்சிகளால் , CSIR நிறுவனத்தில் பல சுற்றுசூழல் பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்பட்டுள்ளதாக CSIR அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலைப் பாதுகாப்பதற்கான சிஎஸ்ஐஆரின் முயற்சியின் ஒரு பகுதியாக ‘Wrinkles Acche Hai’ பிரச்சாரம் உள்ளது என்று கூறிய டாக்டர் கலைச்செல்வி, “ஒவ்வொரு செட் துணிகளையும் அயர்ன் செய்யும் போது ஏறத்தாழ, 200 கிராம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. எனவே, ஒவ்வொரு வாரமும் ஒரு நாளுக்கு அதைக் குறைப்பதே ‘Wrinkles Acche Hai’ பிரச்சாரத்தின் நோக்கமாகும்! என்றும் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப களங்களில் ஆராய்ச்சிப் பணிகளில் செயல்படும் CSIR இந்தியாவின் முக்கிய R&D நிறுவனமாகும்.

37 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நிறுவனமே CSIR எனப்படும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாகும் .

இதில் 3521 விஞ்ஞானிகள், தொழில்நுட்ப மற்றும் துணைநிலை ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 8000 க்கும் ஊழியர்கள் பணிபுரியும் CSIR நிறுவனத்தின் இந்த முயற்சி மிக நல்ல தொடக்கமாகும் என்று பலரும் பாராட்டுகின்றனர்.

இந்தியாவின் மின்சார நுகர்வு பல மடங்கு கூடி வரும் நிலையில் , சுற்றுச் சூழல் பாதுகாப்பில் Wrinkles Acche Hai’ பிரச்சாரம் பெரிய மாற்றத்திற்கான ஒரு சிறிய தொடக்கமாக கருதலாம்.

Tags: Why the CSIR notification to wear non-ironing clothes?
ShareTweetSendShare
Previous Post

பிட்ரோடாவின் இனவெறி கருத்து காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமா திமுக?

Next Post

ரஃபாவை கட்டுக்குள் கொண்டு வந்த இஸ்ரேல்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies