டெல்லியில் வீசிய புழுதிப்புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லி, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக டெல்லி சென்ற 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
நொய்டாவில் கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஷட்டர், வாகனங்கள் மீது விழுந்ததால் பல கார்கள் சேதமடைந்தன. டெல்லியில் சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.