சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தில் ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய அரசின் பெசோ அமைப்பு தெரிவித்துள்ளது.
செங்கமலப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமையாளர் சரவணகுமார், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன், போர் மேன் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கியது.
மேலும் மரத்தடியில் வைத்து தொழிலாளர்கள் பணி செய்ததால் இந்த விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விதிமீறி ஆலை செயல்பட்ட காரணத்தால் ஆலையின் நாக்பூர் உரிமத்தை ரத்து செய்வதாக மத்திய அரசின் PESO அமைப்பு தெரிவித்துள்ளது.