செங்கமலம்பட்டி பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமானது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆலையின் 3 அறைகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. விபத்து ஏற்பட்டபோது தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்கனவே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.