பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், இந்தத் தேர்தல் 2 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது என்றார். ஒருபுறத்தில் பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் வேகமாக நடைபோடும் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளதாகவும், மற்றொரு புறம் ராகுல் காந்தி தலைமையிலான இண்டியா கூட்டணி உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு பக்கம் விடுமுறையில் ராகுல் காந்தி தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஓய்வு எடுக்க செல்வதாக கூறிய அமித் ஷா, மற்றொருபுறம் ஒரு நாள் கூட பிரதமர் மோடி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையை கூட எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதாக குறிப்பிட்டார்.
இண்டி கூட்டணி ஒருதரப்பினரை சமாதானப்படுத்தும் அரசியலை முன்னெடுப்பதாக பிரதமர் தெரிவித்தார். மற்றொரு புறம் தேசிய ஜனநாயக கூட்டணி தேசத்துக்காக தங்களது உயிரையும் இழக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த இரண்டில் எது தங்களுக்கு வேண்டும் என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.