ஆந்திர மாநிலம் திருப்பதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அங்கு பிரம்மாண்ட வாகன பேரணி மேற்கொண்டார்.
அப்போது அங்கு நின்ற ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், ஜெ.பி. நட்டாவை நோக்கி பூக்களைத் தூவி வரவேற்றனர்.
ஆந்திராவில் நாளை மறுதினம் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஜெ.பி. நட்டா ஈடுபட்டார்.