தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தருமபுர ஆதீனத்தின் பொதுமேலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதில், ஆதீன நேர்முக உதவியாளரான செந்தில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.