மேற்கு வங்க மாநிலத்தல் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் கொல்கத்தா வந்தடைந்தார். அவரை ராஜ்பவனில் ஆளுநர் சிவி ஆனந்த போஸ் வரவேற்றார்.
பாரக்பூர், ஹூக்லி, அரம்பக், ஹவுரா ஆகிய 4 இடங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் இன்று பங்கேற்கும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக, கடந்த 3-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 10 நாட்களில் மீண்டும் மேற்கு வங்கத்திற்கு சென்றுள்ளார்.