மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடிக்கு அவரது தாயார் உருவபடத்தை 2 இளைஞர்கள் பரிசாக அளித்தனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோடியின் தாயார் படத்தை இரு இளைஞர்கள் தூக்கி பிடித்தபடி நின்றனர். இதை கவனித்த பிரதமர், தனது மெய்க்காவலர்கள் மூலம் அந்தப் படத்தைப் பெற்றுக் கொண்டதுடன், அதைப் பரிசளித்த இளைஞர்களுக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார். அன்னையர் தினத்தையொட்டி, கிடைத்த அந்தப் பரிசால் பிரதமர் மிகவும் நெகிழ்ச்சியடைந்தார்.