ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டம் பேத்கோட் பகுதியில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேத்கோட் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு உள்ளூர் போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த நபர் சிக்கினார். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.