மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோகண்ட்வாலா சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை வைத்து மாநகராட்சி நிர்வாகம் கவுரவித்துள்ளது.
மும்பையில் உள்ள லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் அவரது ரசிகர்களும் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம் நகரின் முக்கிய சந்திப்பான லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயரை மையப்படுத்தி ஸ்ரீதேவி கபூர் சௌக் என பெயரிட்டுள்ளது.