புதுச்சேரியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
அரியூரில் நடைபெறவிருந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடலூரைச் சேர்ந்த 18 பேர் மினி வேனில் வந்துள்ளனர்.அபிஷேகபாக்கம் அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் கவிழ்ந்தது. விபத்தில் ஓட்டுநர் முஹம்மது உட்பட காயமடைந்த மூவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.