ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த, உத்தர பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில், பல்வேறு கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஈரோடு நகரில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் போலீசார் சோதனை செய்தபோது, உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பகதூர் என்பவர் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை கைது செய்து, ஐந்து கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.