இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரி : மகேந்திரா நிறுவனம் வெளியீடு!
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரி : மகேந்திரா நிறுவனம் வெளியீடு!

Murugesan M by Murugesan M
May 15, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரியை மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதை வடிவமைத்த சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளார்.  எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சாலைப் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா உட்பட உலக நாடுகள், தொடர்ந்து  புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும்  ,அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதிலும்  அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகம்.

வெறும் கனவு என்று சொல்லப்பட்ட பறக்கும் டாக்சியை சாத்தியமாக்கி இருக்கிறது சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம்.  மேலும்  அடுத்த ஆண்டுக்குள்  இந்த  எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி  முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

eVTOL (Electric Vertical Takeoff and Landing) பறக்கும் டாக்சியை  e-Plane என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தியாவின் முதல் கச்சிதமான பறக்கும்  மின்சார டாக்ஸியை உருவாக்கும் நோக்கத்துடன்,  2019 ஆம் ஆண்டு  சென்னை ஐஐடியின் முன்னாள் பொறியியல் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தியால்  ePlane நிறுவனம், சென்னை ஐஐடியில் தொடங்கப் பட்டது.

எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL)  விமானங்களின் டெவலப்பரான ePlane நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) வடிவமைப்பு அமைப்பு ஒப்புதலை (DOA) பெற்றுள்ள  பறக்கும் டாக்சி ,மக்கள் பயன்பாட்டுக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.

நகர்ப்புறங்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள  e200 என்ற இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியில்  இருவர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கும் பேராசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தி, சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியுடன் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரியை , ஒரு தடவை சார்ஜ் செய்தால்  200 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த டாக்சி தரையில் இறங்கவும், மீண்டும் கிளம்பவும்,15 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது என்றும் விளக்கியுள்ளார்.  இது பயன்பாட்டுக்கு வந்த பின், 25 கிலோமீட்டர் துாரத்தை வெறும் 10 நிமிடங்களிலேயே சென்று சேர்ந்து விடலாம்.

சென்னை ஐஐடியின் இந்த அளப்பரிய முயற்சிக்கு, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள மகேந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகேந்திரா, “சென்னை ஐஐடி உருவாக்கிய  பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை காரணமாக, இனி  புதுமைப் படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என யாராலும் கூற முடியாது” என்றும் தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகேந்திரா பதிவு செய்துள்ளார்.

Tags: Mahindra CEO Anand Mahendraelectric flying taxiIndian Institute of TechnologyElectric Vertical Takeoff and Landing
ShareTweetSendShare
Previous Post

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே காலமானார்!

Next Post

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies