பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதனை திரும்பப் பெறுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும், அதனை பாகிஸ்தானால் தடுக்க முடியாது என தெரிவித்தார். மணிசங்கர் அய்யரும், ஃபரூக் அப்துல்லாவும் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதாக கூறி அச்சமூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்பு காஷ்மீரில் பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், காஷ்மீரின் இந்தியப் பகுதியில் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், ஆனால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுதந்திரம் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமித் ஷா கூறினார்.
சுமார் 2 கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்து புதிய சாதனை படைத்துள்ளனர், மேலும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு கோதுமை விற்பனை விகிதத்தில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.