வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக அரசு : சுமார் 300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்!
Jan 14, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக அரசு : சுமார் 300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2019 ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் படி, இந்தியக்  குடியுரிமைக்காக விண்ணப்பித்த முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கியிருப்பதாக  மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக  தெரிவித்துள்ளது.  டெல்லியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 14 பேருக்கு  இந்திய  குடியுரிமைக்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய்குமார் பல்லா  வழங்கினார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம்  மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த  இந்துகள் ,சீக்கியர்கள் ,பௌத்தர்கள்,சமணர்கள் , பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையை எளிதாக்க ஏற்கெனவே இருந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய  நாடுகளில்  மதரீதியாக துன்புறுத்தப்பட்டு  2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்கும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு,  குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.   நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி இந்தச் சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது.  இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவதற்காக,மக்கள்தொகை கணக்கெடுப்பு  இயக்குநரின் தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டது .

மேலும் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களையும், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும், அந்தந்த பகுதி உயர் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு  பிரமாண சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதிய குடியுரிமை திருத்த சட்டத்தின் படி குடியுரிமை கேட்டு , இதுவரை 25,000  விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த  சீக்கியர்கள், ஹிந்துகள் உள்ளிட்ட 14 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, இந்திய குடியுரிமைக்கான ஆணையை வழங்கினார். மேலும் விண்ணப்பித்த 300க்கும் மேற்பட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய  அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில்,  புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் தபன் குமார் டேகா மற்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பாலானோர்  பாகிஸ்தானைச் சேர்ந்த  இந்துகள் என்று கூறப்படுகிறது.

Tags: citizenship certificatesAjay Kumar BhallaMinistry of Home AffairsCitizenship Amendment)Act
ShareTweetSendShare
Previous Post

தமிகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

Next Post

சென்னையில் இளையராஜா கச்சேரி : ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies