விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானைத் தந்தம் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தூர் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ராம் அழகு, செல்லையா ஆகிய இருவரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர்.