இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Jul 26, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
May 19, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்று ஆண்டுகளில் விவசாய நிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 60 லட்சம் மரங்கள் மாயமாகி விட்டதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 80 ஆயிரம் முழுமையாக வளர்ந்த மரங்களை இந்தியா இழந்திருக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

டென்மார்க் நாட்டின், கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் NATURE SUSTAINBILITY என்ற இதழுடன் இணைந்து, செயற்கைக்கோள்-பட அடிப்படையிலான பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

காணாமல் போன மரங்கள், தவறாக வகைப்படுத்திய மரங்கள் மற்றும் முழுமையாக வளர்ந்த பெரிய மரங்கள் என மூன்று வகைகளில் மரத்தைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை பின்பற்றியும், RapidEye மற்றும் PLANET SCOPE ஆகிய இரண்டு வகையான செயற்கைக் கோள் படங்களின் மூலம் மரங்களைக் கணக்கீடு செய்கிறது இந்த ஆய்வு.

அதன் படி 2010ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மீண்டும் படம் எடுக்கப்பட்டது.

2010-2011 ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை, 2018-2022 முடிவுகளுடன் ஒப்பிடும் போது, ​​பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறியப்பட்டதாக சொல்லும் இந்த ஆய்வறிக்கை, அதன் அடிப்படையில் இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் காணாமல் போனதாக தெரிவித்திருக்கிறது.

அதாவது இந்தியாவில் வேளாண் காடுகள் என்ற விவசாய நிலங்களில், முழுமையாக வளர்ந்த மரங்களில் கிட்டத்தட்ட 11சதவீத மரங்களைக் காணவில்லை.
இந்த மரங்கள் எல்லாம் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் , இந்த ஆய்வில், இந்தியாவின் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் பெருமளவில் நன்கு வளர்ந்திருந்த பெரிய மரங்கள் காணாமல் போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கிழக்கு மத்திய பிரதேசத்தில் குறைந்த அளவே மரங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் 56 சதவீதம் விவசாய நிலங்களாகவும் 20 சதவீத நிலம் காடுகளாகவும் உள்ளன. உலகின் மிகப் பெரிய விவசாய நாடாக விளங்கும் இந்தியாவில் இந்த ஆய்வு ஒரு மேம்போக்கான ஆராய்ச்சியாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விவசாய காடுகள் சமீப காலமாக நெல் வயல்களாக மாறி இருப்பதாலும் இந்த ஆய்வறிக்கை மரங்களைக் காணவில்லை என்று கூறி இருக்கிறது என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 60 lakh trees in Indiashocking information in the survey!
ShareTweetSendShare
Previous Post

கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!

Next Post

இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies