இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Jul 29, 2026, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
May 19, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்று ஆண்டுகளில் விவசாய நிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 60 லட்சம் மரங்கள் மாயமாகி விட்டதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 80 ஆயிரம் முழுமையாக வளர்ந்த மரங்களை இந்தியா இழந்திருக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

டென்மார்க் நாட்டின், கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் NATURE SUSTAINBILITY என்ற இதழுடன் இணைந்து, செயற்கைக்கோள்-பட அடிப்படையிலான பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

காணாமல் போன மரங்கள், தவறாக வகைப்படுத்திய மரங்கள் மற்றும் முழுமையாக வளர்ந்த பெரிய மரங்கள் என மூன்று வகைகளில் மரத்தைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை பின்பற்றியும், RapidEye மற்றும் PLANET SCOPE ஆகிய இரண்டு வகையான செயற்கைக் கோள் படங்களின் மூலம் மரங்களைக் கணக்கீடு செய்கிறது இந்த ஆய்வு.

அதன் படி 2010ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மீண்டும் படம் எடுக்கப்பட்டது.

2010-2011 ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை, 2018-2022 முடிவுகளுடன் ஒப்பிடும் போது, ​​பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறியப்பட்டதாக சொல்லும் இந்த ஆய்வறிக்கை, அதன் அடிப்படையில் இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் காணாமல் போனதாக தெரிவித்திருக்கிறது.

அதாவது இந்தியாவில் வேளாண் காடுகள் என்ற விவசாய நிலங்களில், முழுமையாக வளர்ந்த மரங்களில் கிட்டத்தட்ட 11சதவீத மரங்களைக் காணவில்லை.
இந்த மரங்கள் எல்லாம் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் , இந்த ஆய்வில், இந்தியாவின் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் பெருமளவில் நன்கு வளர்ந்திருந்த பெரிய மரங்கள் காணாமல் போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கிழக்கு மத்திய பிரதேசத்தில் குறைந்த அளவே மரங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் 56 சதவீதம் விவசாய நிலங்களாகவும் 20 சதவீத நிலம் காடுகளாகவும் உள்ளன. உலகின் மிகப் பெரிய விவசாய நாடாக விளங்கும் இந்தியாவில் இந்த ஆய்வு ஒரு மேம்போக்கான ஆராய்ச்சியாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விவசாய காடுகள் சமீப காலமாக நெல் வயல்களாக மாறி இருப்பதாலும் இந்த ஆய்வறிக்கை மரங்களைக் காணவில்லை என்று கூறி இருக்கிறது என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 60 lakh trees in Indiashocking information in the survey!
ShareTweetSendShare
Previous Post

கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!

Next Post

இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies