இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Sep 13, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் மாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
May 19, 2024, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மூன்று ஆண்டுகளில் விவசாய நிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 60 லட்சம் மரங்கள் மாயமாகி விட்டதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 80 ஆயிரம் முழுமையாக வளர்ந்த மரங்களை இந்தியா இழந்திருக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

டென்மார்க் நாட்டின், கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் NATURE SUSTAINBILITY என்ற இதழுடன் இணைந்து, செயற்கைக்கோள்-பட அடிப்படையிலான பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

காணாமல் போன மரங்கள், தவறாக வகைப்படுத்திய மரங்கள் மற்றும் முழுமையாக வளர்ந்த பெரிய மரங்கள் என மூன்று வகைகளில் மரத்தைக் கண்டறிவதற்கான வழிமுறைகளை பின்பற்றியும், RapidEye மற்றும் PLANET SCOPE ஆகிய இரண்டு வகையான செயற்கைக் கோள் படங்களின் மூலம் மரங்களைக் கணக்கீடு செய்கிறது இந்த ஆய்வு.

அதன் படி 2010ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மீண்டும் படம் எடுக்கப்பட்டது.

2010-2011 ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை, 2018-2022 முடிவுகளுடன் ஒப்பிடும் போது, ​​பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறியப்பட்டதாக சொல்லும் இந்த ஆய்வறிக்கை, அதன் அடிப்படையில் இந்தியாவில் 60 லட்சம் மரங்கள் காணாமல் போனதாக தெரிவித்திருக்கிறது.

அதாவது இந்தியாவில் வேளாண் காடுகள் என்ற விவசாய நிலங்களில், முழுமையாக வளர்ந்த மரங்களில் கிட்டத்தட்ட 11சதவீத மரங்களைக் காணவில்லை.
இந்த மரங்கள் எல்லாம் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என்றே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் , இந்த ஆய்வில், இந்தியாவின் தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் பெருமளவில் நன்கு வளர்ந்திருந்த பெரிய மரங்கள் காணாமல் போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கிழக்கு மத்திய பிரதேசத்தில் குறைந்த அளவே மரங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் 56 சதவீதம் விவசாய நிலங்களாகவும் 20 சதவீத நிலம் காடுகளாகவும் உள்ளன. உலகின் மிகப் பெரிய விவசாய நாடாக விளங்கும் இந்தியாவில் இந்த ஆய்வு ஒரு மேம்போக்கான ஆராய்ச்சியாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விவசாய காடுகள் சமீப காலமாக நெல் வயல்களாக மாறி இருப்பதாலும் இந்த ஆய்வறிக்கை மரங்களைக் காணவில்லை என்று கூறி இருக்கிறது என்றும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 60 lakh trees in Indiashocking information in the survey!
Share
Tweet
SendShare
Previous Post

கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!

Next Post

இடி, மின்னல், கனமழை: கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies