பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரிட்டனில் பேசிங்ஸ்டோக் நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் அதிகமான வாகனங்களில் பாஜக கொடி கட்டப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய இந்த வாகனப் பேரணியானது ரீடிங், நியூபரி, ஸ்லோ உள்ளிட்ட நகரங்கள் வாயிலாகச் சென்று ஹம்ப்ஷையர், பேசிங்ஸ்டோக் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, கார்னிவல் ஹாலில் ராமருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது மக்களவைத் தேர்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்தனை செய்யப்பட்டது.
கெளடியா இயக்க தலைவர் பக்தி சுந்தர் சன்னியாசி மகாராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.