கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட 43 மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.