கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உள்ளிட்ட பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ராதேஷ்யாம் சர்மா, அதிக அளவாக பிலானியில் 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் 2 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். பல்வேறு பகுதிகிளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.