பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆஸம்கான் பணத்தால் வியர்வையை துடைப்பது இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அப்போது பேருந்தில் பயணித்த கிரிக்கெட் வீரர் ஆஸம்கான், பாகிஸ்தான் கரன்சியால் தனது வியர்வைத் துடைத்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
ஏற்கெனவே பாகிஸ்தானில் வெப்ப அலையால் ஏராளமானோர் பலியாகி வரும் நிலையில், ஏழைகளைக் கேலி செய்யும் விதத்தில் ஆஸம்கானின் செயல்பாடு இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.