கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம் அறிமுகத்தால் மகிழ்ச்சி!
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம் அறிமுகத்தால் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
May 21, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதனுக்கு மாற்றாக சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த ரோபோடிக்ஸ் இயந்திரம் குறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்….

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதற்கான PEMSR தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்பட்டதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில், சென்னையில் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு, 3 நவீன அடைப்பு நீக்கும் ‘பண்டிகூட்’ இயந்திரங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ONGC நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட CSR நிதி மூலம் இந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை கொண்டு, குழாய் வாயில்களில் அடைப்பு நீக்குதல், தூர் வாருதல் போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும், மேலும், கழிவுநீர் குழாயில் இருக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்றவும், விஷவாயு கசிவை கண்டறியவும் சென்சார் கேமராக்கள் போன்ற சிறப்பு அம்சங்களும் ‘பண்டிகூட்’ இயந்திரத்தில் உள்ளதாக ரோபோடிக் ஆப்பிரேட்டர் தெரிவித்தார்.

குறிப்பாக, சென்னை முழுவதும், 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் கழிவுநீர்குழாய் அமைத்து, 9 லட்சத்து 30 ஆயிரம் கழிவுநீர் எடுத்து செல்லப்படுகிறது. பின்னர், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்று நாள்தோறும் சுமார் 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நவீன அடைப்பு நீக்கும் ரோபோடிக் இயந்திரம் கொண்டு வந்திருப்பது, தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாகும் என்றால் அது மிகையில்லை. இதனால் அவர்களின் நேர விரயம், பணி சுமை மற்றும் உயிர் பலியும் வெகுவாக குறையும். இந்த நவீன ரோபோடிக்ஸ் கழிவு நீக்கும் இயந்திரம் சோதனை வெற்றி பெற்றால், சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்துவதே சென்னை குடிநீர் வாரியத்தின் இலக்காக உள்ளது.

கழிவுநீர் அடைப்புகளை நீக்க இறக்கப்படும் ஆட்கள் எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கி மரணத்தை சந்திந்து வருவது தற்போது வரை நீடிக்கும் சூழ்நிலையில், கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களின் ஹீரோவாக திகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags: Delighted with the introduction of sewage disposal robotics machine!
ShareTweetSendShare
Previous Post

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

Next Post

இந்திய MNC பெண் ஊழியர்களை குறிவைக்கும் ISIS!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies