கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம் அறிமுகத்தால் மகிழ்ச்சி!
Sep 13, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம் அறிமுகத்தால் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
May 21, 2024, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனிதனுக்கு மாற்றாக சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த ரோபோடிக்ஸ் இயந்திரம் குறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்….

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதற்கான PEMSR தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்பட்டதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில், சென்னையில் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு, 3 நவீன அடைப்பு நீக்கும் ‘பண்டிகூட்’ இயந்திரங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ONGC நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட CSR நிதி மூலம் இந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை கொண்டு, குழாய் வாயில்களில் அடைப்பு நீக்குதல், தூர் வாருதல் போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும், மேலும், கழிவுநீர் குழாயில் இருக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்றவும், விஷவாயு கசிவை கண்டறியவும் சென்சார் கேமராக்கள் போன்ற சிறப்பு அம்சங்களும் ‘பண்டிகூட்’ இயந்திரத்தில் உள்ளதாக ரோபோடிக் ஆப்பிரேட்டர் தெரிவித்தார்.

குறிப்பாக, சென்னை முழுவதும், 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் கழிவுநீர்குழாய் அமைத்து, 9 லட்சத்து 30 ஆயிரம் கழிவுநீர் எடுத்து செல்லப்படுகிறது. பின்னர், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்று நாள்தோறும் சுமார் 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நவீன அடைப்பு நீக்கும் ரோபோடிக் இயந்திரம் கொண்டு வந்திருப்பது, தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாகும் என்றால் அது மிகையில்லை. இதனால் அவர்களின் நேர விரயம், பணி சுமை மற்றும் உயிர் பலியும் வெகுவாக குறையும். இந்த நவீன ரோபோடிக்ஸ் கழிவு நீக்கும் இயந்திரம் சோதனை வெற்றி பெற்றால், சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்துவதே சென்னை குடிநீர் வாரியத்தின் இலக்காக உள்ளது.

கழிவுநீர் அடைப்புகளை நீக்க இறக்கப்படும் ஆட்கள் எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கி மரணத்தை சந்திந்து வருவது தற்போது வரை நீடிக்கும் சூழ்நிலையில், கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களின் ஹீரோவாக திகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags: Delighted with the introduction of sewage disposal robotics machine!
Share
Tweet
SendShare
Previous Post

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

Next Post

இந்திய MNC பெண் ஊழியர்களை குறிவைக்கும் ISIS!

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies