கோரமண்டல் தொழிற்சாலை தொடர்பான தீர்ப்பு ஏற்புடையது அல்ல என எண்ணூர் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அனுமதி வழங்கினால் கோரமண்டல் உர தொழிற்சாலையை திறக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எண்ணூர் போராட்டக் குழுவினர், உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை குறித்து தீர்ப்பில் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், ஆலையை மீண்டும் திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.