நஷ்டத்தில் இயங்கும் ஹைதராபாத் மெட்ரோ நிறுவனம் : 2026ஆம் ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய முடிவு?
Mar 15, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நஷ்டத்தில் இயங்கும் ஹைதராபாத் மெட்ரோ நிறுவனம் : 2026ஆம் ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய முடிவு?

Murugesan M by Murugesan M
May 22, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைதராபாத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், ஹைதராபாத் மெட்ரோவை 2026ம் ஆண்டுக்குப் பிறகு விற்க முடிவு செய்திருப்பதாக அதை நிர்வகிக்கும் L&T நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

மெட்ரோ இரயில் திட்டம் என்பது நகரங்களின் வாகன நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது. பெரிய பெரிய நகரங்களின் இயங்கும் இந்த மெட்ரோ இரயில் சேவை முதன் முதலாக லண்டனில் கொண்டுவரப் பட்டது.

தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா என வளர்ந்த நாடுகளில் மெட்ரோ திட்டம் விரிவடையத் தொடங்கியது. இந்தியாவில் கொல்கத்தாவில் முதல் மெட்ரோ வந்தாலும் கூட , டெல்லியின் முதல் மெட்ரோ இரயில் 2002ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் மெட்ரோ ரயில் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வந்தாலும் , மெட்ரோ நிறுவனங்கள் இன்னமும் லாபம் பெறவில்லை என்பதே கசப்பான உண்மை .

ஏன் மெட்ரோவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை L&T நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன் சொல்லிருக்கிறார். ஹைதராபாத் மெட்ரோ இரயில் திட்டத்தில் 90 சதவீத பங்குகளை L&T நிறுவனமும் மீதமுள்ள 10 சதவீத பங்குகளை தெலங்கானா அரசும் கொண்டுள்ளன.

தெலங்கானா காங்கிரஸ் அரசு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனாலேயே, மெட்ரோவில் பெண்கள் பயணிப்பது குறைந்து விட்டதால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால், நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குகிறது.

ஹைதராபாத்தில் கடந்த நவம்பரில் 5.50 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது 4.80 லட்சமாக குறைந்துள்ளது முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த L&T நிறுவன தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன், ஹைதராபாத் மெட்ரோவின் பங்குகளை 2026க்குப் பின் விற்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

13000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் ஹைதராபாத் மெட்ரோ, தெலங்கானா அரசிடம் வட்டியில்லா கடனாக 3000 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், மெட்ரோவின் சில நிலங்களை விற்று நஷ்டத்தை சரி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலவசத் திட்டங்கள் மாநில கஜானாவை எப்படிக் கெடுக்கின்றன என்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாநிலங்கள் நிதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் , இலவசங்களை அறிவித்து மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார்.

தேர்தலுக்காக அரசுக் கஜானாவை காலியாக்க எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை என கடுமையாக பிரதம்ர் குற்றம்சாட்டியிருந்தார்.

பிரதமர் மோடி தெரிவித்தது போல , ‘ ஒரு நகரத்தில் மெட்ரோவை நிர்மாணித்து, நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி ஒருபுறம் வேகமாக அதிக முதலீட்டில் நடைபெற்று வருகின்றன . அதே சமயம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை உறுதியளிக்கும் மாநில அரசுகளின் திட்டங்கள் மெட்ரோவின் நஷ்டத்துக்கு மட்டுமின்றி ,நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: TelanganaL&THyderabad MetroMetro Rail projectShankar Raman
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்

Next Post

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies